Monday, June 25, 2012

ஈட்டின் சிறப்பு

திருவாய்மொழிக்கு ஐந்து வ்யாக்யானங்கள் அமைந்திருந்தும் ஏன் நம்பிள்ளையின் வ்யாக்யானத்திற்கு மட்டும் ஈடு என்ற திருநாமம் வந்தது?

ஈடு என்பது இடுதல்என்கின்ற சொல்லின் முதனிலை திருந்த ப்ரயோகமாக இருந்திருந்தால், மற்றவர்கள் இட்டருளிய வ்யாக்யானங்களுக்கும் ஈடுஎன்ற திருநாமம் வந்திருக்கவேண்டுமே!

(௧) ஈடு என்ற சொல்லிற்கு ஒப்பு’ (equivalent) என்ற பொருள் உண்டு. ஸ்ரீபாஷ்யத்துக்கு விலக்ஷணம் பொருந்திய வ்யாக்யானமாய் திகழும் ஸ்ருதப்ரகாசிகைக்கு அளவால் ஈடு ஒத்திருப்பதால் நம்பிள்ளையின் திருவாய்மொழி உரைக்கு ஈடு என்ற திருநாமம் அமைந்திருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

(௨) மாறன் மறைப்பொருளை ஈடுபடும்படியிறே செய்ததுஎன்று பிள்ளைலோகம் ஜீயர் சாதிக்கிறார். தன்னை கற்பார் எல்லாரையும் திருவாய்மொழியிடத்து ஈடுபடச் செய்வதால் ஈடுஎன்ற திருநாமத்தை இந்த க்ரந்தத்திற்கு பெரியோர்கள் வழங்கியிருக்கலாம். 

(௩) ஈடுஎன்ற சொல்லிற்கு கவசம் என்றும் ஒரு பொருள் உண்டு. அப்பொருளை நம்பிள்ளையே பாண்டவர்களுக்காக உடம்புக்கு ஈடு இடாதே எதிரிகள் அம்புக்கு இலக்காக்கின இந் நீர்மைஎனுமிடத்தில் கையாண்டிருக்கிறார். இதற்கு ஜீயர் அரும்பத உரையில் ஈடிடாதே-கவசமிடாதேஎன்ற குறிப்பு இருக்கிறது. எப்படி கவசமானது உடலை காக்கிறதோ, அதே போல் இந்த ஈடானது கற்போராலும்,  எழுதுவோராலும், வேற்று மக்களாலும் தன் நிலைதிரிந்து மாருபடாதபடி திருவாய்மொழியை காத்து நிற்கிறது.

குறிப்பு: ஈடுஎன்பது திருவாய்மொழி பேருரையை குறிக்க வந்திருந்தாலும், பிற்காலத்தில் நம்பிள்ளை எழுதிய திருவிருத்தம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானங்களுக்கும் இந்த திருநாமம் அமைந்து விட்டதாக சில இடங்களிலிருந்து ஆறியப் பெறுகிறோம்.

மேல்வரும் இடுகைகளில் நம்பிள்ளையின் உரைத்திறனை உதாஹரனங்கள் கொண்டு விரிவாகப் பார்ப்போம்.

Ref: ‘திருவாய்மொழிப் பேருரையாளர் நம்பிள்ளை உரைத்திறன்’ – ஸ்ரீ. மதுரை அரங்கராஜன் ஸ்வாமி

Dasan
Mukundhan Kidambi

No comments:

Post a Comment